கோப்பாயில் வீதியை கடக்க முற்பட்ட பெண் மோட்டார் சைக்கிள் மோதி உயிரிழப்பு


மோட்டார் சைக்கிளில் விபத்தில் காயமடைந்த வயோதிப பெண்மணி சிகிச்சை பலனின்றி  நேற்றைய தினம் சனிக்கிழமை  உயிரிழந்துள்ளார். 

கோப்பாய் தெற்கை சேர்ந்த நாகராசா ராசபூபதி (வயது 68) என்பவரே உயிரிழந்துள்ளார். 

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை வீதியில் தனது வீட்டுக்கு அருகில் கடந்த வெள்ளிக்கிழமை இரவு வீதியை கடக்க முற்பட்ட வேளை , பருத்தித்துறை பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த மோட்டார் சைக்கிள் மோதி படுகாயமடைந்தார். 

படுகாயமடைந்தவர்  சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments