கட்டைக்காட்டில் விபத்து ; இளைஞன் உயிரிழப்பு


யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு கட்டைக்காடு பகுதியில் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இரவு  இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில்இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மன்னார் பகுதியைச் சேர்ந்த செபமாலை நிரோசன் (வயது 22) என்பவரே உயிரிழந்துள்ளார். 

இளைஞரின் சடலம் மந்திகை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் மருதங்கேணி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். 

No comments