கப்பல் விடும் இந்தியா?



நாகப்பட்டினத்திற்கும்  காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் படகு சேவையை ஆரம்பிக்க இன்னும் 6 மாதங்கள் ஆகும் என இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

நாகப்பட்டினத்தில் பயணிகள் முனையம் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கியுள்ளதாகவும், பணிகள் முடிவடைய இன்னும் 4 முதல் 5 மாதங்கள் ஆகும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இத்திட்டத்திற்காக இந்திய வெளியுறவு அமைச்சகம் 8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது .மேலும் நாகப்பட்டினம் போன்ற சிறிய துறைமுகங்களை பராமரிக்கும் தமிழ்நாடு கடல்சார் வாரியம் எதிர்காலத்தில் இத்தொகையை பெறும்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கடந்த வாரம் இந்தியா சென்று இந்தியா பிரதமர் நரேந்திர மோடியுடன் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் இந்த கப்பல் சேவையை ஆரம்பிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

No comments