வவுனியா கொலைகள்:எவரும் கைதாகவில்லை!



வவுனியால் அதிகரித்துள்ள குழு மோதல்களின் மத்தியில் பிறந்தநாள் வைபவம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, இனந்தெரியாத குழுவொன்று வீடு புகுந்து, நடத்திய தாக்குதலில் காயமடைந்த இளம் குடும்பஸ்தரும் மரணித்துள்ளார்.

தாக்குதல் சம்பவத்தில் , பெண்ணொருவர் உயிரிழந்ததுடன், காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண்ணின்  கணவரும் இன்று உயிரிழந்துள்ளார்.  

ஒரு பிள்ளையின் தந்தையான சுகந்தன் என்ற 33 வயதான நபரே உயிரிழந்துள்ளார்.

தீக்காயங்களுக்கு உள்ளாகி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், நேற்று (25)  மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

எனினும் அவர் சிகிச்சைப் பலனின்றி இன்று அதிகாலை (26) உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். .

கடந்த 23ஆம் திகதி நள்ளிரவு; பிறந்தநாள் விழா நடைபெற்ற வீட்டிற்குள் நுழைந்த 8 பேர், அங்கிருந்த சிறுவர்கள் உட்பட அனைவரையும் கூரிய ஆயுதங்களால் தாக்கியிருந்தனர்.

பின்னர் வீட்டை தீயிட்டுக் கொளுத்தியதில் சுகந்தனின் மனைவியான 22 வயதுடைய பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்திருந்தார்.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் எவரும் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.



No comments