எடுத்துச்சென்றதை மீளதரக்கோரும் இலங்கை அரசு!



கோத்தபாயவை விரட்டிய பின்னர் கைப்பற்றி எடுத்துச்செல்லப்பட்ட வரலாற்றுப்பொருட்களை கையளிக்க இலங்கை அரசு கெஞ்சி வருகின்றது.

தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமான (Coats of Arms) எவரிடத்திலேனும் இருக்குமாயின் அதனை ஜூலை 31 ஆம் திகதிக்கு முன்பாக ஜனாதிபதி அலுவலகத்தில் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.

2022-07-09 – 2022-07-14 வரையிலான தினங்களில் ஜனாதிபதி மாளிகையை கையகப்படுத்திக்கொண்டு அதற்குள் தங்கியிருந்த காலப்பகுதியில் கலைத்துவ மற்றும் தொல்லியல் பெறுமதிமிக்க பல்வேறு பொருட்கள் காணாமல் போயுள்ளன. இலங்கையின் முன்னாள் ஆளுநர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதிகளின் உத்தியோபூர்வ சின்னமாக காணப்பட்ட (Coats of Arms) சின்னங்கள் பலவும் அவற்றுள் அடங்கும்.

அரசாங்கத்தின் சொத்துக்களை சட்டவிரோதமாக தம்வசம் வைத்துக்கொள்வது தண்டனைக்குரிய குற்றமாகும் என்பதால், குறிப்பிட்ட காலத்தின் பின்னர் மேற்படி சின்னம் நபரொருவரிடத்தில் அல்லது நிறுவனமொன்றிடத்தில் இருக்கும் பட்சத்தில் அதற்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க தெரிவித்தார்.


No comments