13:சி.விக்கும் நம்பிக்கை தெரிகிறதாம்!



 13வது திருத்த சட்டத்தை கடுமையாக எதிர்த்து வந்திருந்த வடமாகாணசபையின் முன்னாள் முதலைமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சி.வி.விக்கினேஸ்வரன் தனது நம்பி;க்கையினை வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதம் வழங்காத காவல்துறையினர்; கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருப்பதை போன்று 13ஆவது திருத்தச்சட்டத்தில் உள்ள காவல்துறை அதிகாரத்தை நடைமுறைப்படுத்தலாம் என,  தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை நேற்று(24) சந்தித்து பேசிய போது அதனை வலியுறுத்தியதாக கூட்டணியின் தலைவர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

மாகாண அரசிடமிருந்து பறிக்கப்பட்டுள்ள அதிகாரங்கள் முன்மொழிவொன்றை ஜனாதிபதிக்கு வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், அதனை ஆய்வுக்குட்படுத்த ஐவர் அடங்கிய விசேட குழுவொன்றை நியமிக்குமாறும் கோரிக்கை விடுத்து ஐந்து பேரின் பெயர்களையும் பரிந்துரைத்திருந்ததாகவும் குறிப்பிட்டார்.

“இந்தியாவின் பாண்டிசேரியில் ஆயுதங்கள் காவல்துறை சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் ஆயுதங்களுக்கு பதிலாக தடிகளை மாத்திரமே கையில் வைத்திருப்பார்கள்.

ஆயுதங்கள் இல்லாது காவல்துறை அதிகாரத்தை வழங்குவது குறித்து ஜனாதிபதிக்கு விளக்கமளித்தேன். இந்நிலையில், 13ஆவது திருத்தச்சட்டத்தை நடைமுறைப்படுத்த ஜனாதிபதி அக்கறையுடன் செல்படுவதை அவதானிக்க முடிகிறது” எனவும் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்,


No comments