வெலிக்கடை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல்


வெலிக்கடை சிறைச்சாலை படுகொலையின் 40ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வுகள் வல்வெட்டித்துறையில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் எம்.கே சிவாஜிலிங்கம் தலைமையில் நடைபெற்றது 

நிகழ்வில் படுகொலை செய்யப்பட்ட குட்டிமணி  , தங்கத்துரை , ஜெகன் , தேவன் உள்ளிட்ட 53 தமிழ் அரசியல் கைதிகளின் நினைவாக மலர் தூபி , பொதுச்சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது. 

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டு இருந்த தமிழ் அரசியல் கைதிகள் மீது சிறையில் இருந்த சிங்கள சிறைக்கைதிகள் , சிறைக்காவலர்கள் உள்ளிட்ட தரப்பினர் மோசமான தாக்குதல்களை மேற்கொண்டு படுகொலைகளை அரங்கேற்றினர் 

சுதந்திர தமிழீழத்தை எனது கண்கள் பார்க்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் சொன்ன குட்டி மணியின் இரு கண்களும் உயிரோடு பிடுங்கப்பட்டு ஜெயில் அதிகாரிகளின் பூட்ஸ் கால்களால் அவை நசுக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது  






No comments