அனுராதபுரம் பகுதியில் பேரூந்து விபத்து-இருவர் உயிரிழப்பு 29 பேர் காயம்




பாதெனிய – அனுராதபுரம் வீதியின் அம்பன்பொல பிரதேசத்தில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன் 29 பேர் காயமடைந்துள்ளனர்.

பாதெனியவில் இருந்து அனுராதபுரம் நோக்கி பயணித்த பேருந்து, பாரஊர்தி ஒன்றுடன் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கொள்கலன் ட்ரக் வண்டியுடன் மோதியதில் 32 மற்றும் 71 வயதுடைய இருவர் உயிரிழந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஆறு பெண்களும் ஒரு ஆணும் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை மேலும் 18 பெண்களும் 4 ஆண்களும் கல்கமுவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

No comments