யாழில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற சொகுசு பேருந்து தீக்கிரை




யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த சொகுசு பேருந்து ஒன்று இன்றைய தினம் வெள்ளிக்கிழமை தீப்பிடித்து முற்றாக எரிந்து நாசமாகியுள்ளது.

மதுரங்குளிய கரிகெட்டிய பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும், தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.





No comments