கலாநிதி ரமேஷ் தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு!


தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு  உறுப்பினராக  நியமிக்கப்பட்டுள்ளார் பேராதனை பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் விரிவுரையாளர்  கலாநிதி ரமேஷ்.

 தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு தெரிவு செய்யப்பட்ட 5 புதிய உறுப்பினர்கள் தொடர்பான அறிக்கை, எதிர்வரும் சில தினங்களில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

இதன்படி தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை ஜனாதிபதி நியமிப்பார் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அண்மையில் கூடிய அரசியலமைப்பு பேரவை, தேர்தல் ஆணைக்குழுவுக்கு புதிய உறுப்பினர்களை தேர்வு செய்துள்ளது.

அதன் தலைவர் பதவிக்காக முன்னாள் தேர்தல் ஆணையாளர் நாயகம் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்கவை நியமிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன குறிப்பிட்டுள்ளார்.

No comments