ரணில் செல்லும் முன்பதாக கைதுகள்!



இலங்கை ஜனாதிபதி இந்தியாவிற்கும் அடுத்து சீனாவிற்கும் பயணிக்கவுள்ள நிலையில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 22 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு அருகே நேற்று புதன்கிழமை இரவு இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபட்டபோது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை கடற்படையினர் 3 படகையும் அதிலிருந்த 22 கடற்றொழிலாளர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களை மயிலிட்டி துறைமுகத்துக்கு அழைத்து வந்திருந்த கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை திணைக்களத்தினரிடம் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

இதனிடையே இயந்திர கோளாறு காரணமாக தீவக கடற்பரப்பில் கரை ஒதுங்கிய இந்திய மீனவர்கள் பாதுகாப்பாக திருப்பி அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களது படகிலிருந்த வெளியிணைப்பு இயந்திரம் செயலிழந்த நிலையில் மீள திருத்தப்பட்டுள்ளதுடன் மீனவர்கள் பாதுகாப்பாக தமிழகத்திற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.


No comments