யாழில். மோட்டார் சைக்கிள் திருடிய குற்றத்தில் ஒருவர் கைது


யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டுகளுடன் தொடர்புடைய ஒருவர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை  பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் சிவன் கோவிலுக்கு, கடந்த ஞாயிற்றுக்கிழமை வழிபடச் சென்றவர் வீதியோரமாக மோட்டார் சைக்கிளை தரித்து விட்டு, தலைக் கவசத்தையும் விட்டு ஆலயத்தினுள் சென்றுள்ளார். 

வழிபாடு முடித்து வீடு திரும்ப முற்பட்ட போது, மோட்டார் சைக்கிளை காணவில்லை.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உரிமையாளரால் முறைப்பாடு செய்யப்பட்டது.

விசாரணைகளை மேற்கொண்ட யாழ்ப்பாண பொலிஸார், பண்டதரிப்பை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்டவரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில்,  பாழடைந்த கட்டடத்துக்குள் மறைத்து விடப்பட்டிருந்த திருடிய மோட்டார் சைக்கிளையும் பொலிஸார் கைப்பற்றினர்.

அதேவேளை கடந்த மாதம் யாழ்ப்பாணம் மாநகரில் திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் மற்றும் பளை, கொடிகாமம் பகுதிகளில் மோட்டார் சைக்கிள்கள் திருட்டுடனும் சந்தேக நபருக்கு தொடர்புள்ளமை விசாரணைகளில் தெரியவந்தது.


No comments