நியூசிலாந்தில் நினைவேந்தப்பட்ட தமிழினப் படுகொலை நாள்

நியூசிலாந்தில் 14வது முறையாகவும் தமிழர் இனவழிப்பு நாள் Fickling Cente, Threekings(546 Mount Albert Rd, Three Kings, Auckland 1042) மிகஎழுச்சியுடன் நினைவு

கூறப் பட்டது. 

இந்த உணர்வு பூர்வமான நிகழ்வினை ஆரம்பிக்கும் முகமாக முதலில் பொது சுடரினை முதியோர் சங்கத்தின் தலைவி திருமதி மகாசிவம் அவர்கள் ஒளிர்வித்தார். அதனை தொடர்ந்து நியூசிலாந்து தேசிய கொடியானது நியூசிலாந்து தமிழ் சங்கத்தின் பொறுப்பாளர் சுந்தராஐன் அவர்களால் ஏற்றி வைக்கப்பட்டதுடன் தமிழீழ தேசிய கொடியானது செயற்பாட்டாளர் காவியன் அவர்களால் அவர்களால் ஏற்றிவிக்கப்பட்டது. 

ஈகைசுடரினை லெப் கேணல் குயிலனின் தாயார் அவர்கள் ஏற்றி வைக்க அதனைத்தொடர்ந்து முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிர்நீத்த அனைவருக்காகவும் மலர் வணக்கமும் தீபஞ்சலியும் செலுத்தப்பட்டது. 

நிகழ்வின் தொடர்ச்சியாக தமிழின அழிப்பு நாளினை தாங்கிய காணொளி காண்பிக்கப்பட்டது. 

பின்னர் செல்வி சாருஜா சர்வேஸ்வரன் மற்றும் அவர்களால் 'தாய்மண்ணை முத்தமிட வேண்டும்.....' என்ற பாடலுக்கு வலிகளை உணர்வாக்கிய நடனம் இடம்பெற்றது. 

பின்னர் தமிழின பேரவலத்தின் வலிகளை கேசிகா, குருபரன் மற்றும் ஹனன்யா ஆகியோர் தம் கவிதை வரிகளால் வர்ணித்திருந்தார்கள். 

அடுத்து முள்ளிவாய்க்கால் பேரவல நினைவாக 'மண்ணே மண்ணே தமிழ் மண்ணே.....' எனும் பாடலுக்கு செல்வி துவாரகா குருபரன் மற்றும் தமிழோசை குருபரன் ஆகியோரின் உணர்வு பூர்வமான நடனம் இடம்பெற்றது. 

தொடர்ந்து ஆசிரியர் அருள்தாஸ் அவர்களின் உரை இடம்பெற்றது. தமிழின அழிப்பு என்பது இன்று ஆரம்பிக்கப்பட்டது அல்ல, அது பல தசாப்பதங்களாக நடைபெற்று வருகிறது என்பதினை மிகத்தெளிவாகவும் உணர்வுபூர்வமாகவும் எடுத்துரைத்தார். 

பின்னர் மே மாத வலிகளை உலகுக்கு உணர்த்தும் விதமாக பகுரங்கா தமிழ் பாடசாலை மாணவர்களான கேசிகா, காவியா, தமிழரசி மற்றும் கேசினி ஆகியோரால் "மே என்ற பேய் வந்தது..." எனும் தலைப்பில் கவியரங்கம் இடம்பெற்றது.

பின்னர் 2009 பேரவலத்தின் போது காயங்கள் தாங்கிய எம்மக்களின் சீவனை காத்த முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கப்பட்டு நினைவுகூறப்பட்டது. 

பின்னர் நிகழ்வின் இறுதியாக தமிழர் ஒருங்கிணைப்பு குழுவின் ஒருங்கிணைப்பாளர் திரு தயாகரன் அவர்கள் நியூசிலாந்து தேசிய கொடியினை இறக்கிவைத்தார். தமிழீழ தேசியக்கொடியினை செயற்பாட்டாளர் சர்வேஸ்வரன் அவர்கள் இறக்கி வைத்தார்.

No comments