ஆர்னோல்ட் பிணையில் விடுவிப்பு


யாழ் மாநகர சபை முன்னாள் முதல்வர் இமானுவேல் ஆனோல்ட் ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதுடன், வழக்கு எதிர்வரும் ஜுலை 17ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண தொகுதி கிளைக் கூட்டத்துக்கு பின்னர், ஆர்னோல்ட்டுக்கும் மற்றுமொரு உறுப்பினருக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து மோதல் முற்றிய நிலையில் ஆர்னோல்ட் தாக்குதலை மேற்கொண்டார் என மற்றைய உறுப்பினர், யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன், வைத்திய சாலையிலும் அனுமதியானார்.

குறித்த சம்பவம் தொடர்பாக இன்றைய தினம் புதன்கிழமை வாக்குமூலம் வழங்குவதற்காக சட்டத்தரணியுடன் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு சென்றபோதே இமானுவேல் ஆனோல்ட் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்டவரை நீதிமன்றத்தில் முற்படுத்தப்படுத்தியதை அடுத்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை அடுத்து, சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

No comments