வடக்கில் மகிழ்ச்சி!



ராஜினாமா செய்ய மறுத்த வடக்கின் ஆளுநரும் தூக்கியடிக்கப்பட்ட நிலையில் ஆதரவாளர்கள் பலரும் கவலையில் மூழ்கியுள்ளனர்.எனினும் வடமாகாணசபையின் அதிகாரிகள் மட்டத்தில் மகிழ்ச்சி தலைதூக்கியுள்ளது.

ஆதரவாளர் ஒருவர் ஆதங்கத்தில் "வடக்கில் ஆளுநராக இருந்தவர்களில் சிலரால் மட்டுமே இது சாத்தியமாகும்..

தனது பதவி விலக்கப்பட்ட நிலையில் தான் கடமையாற்றிய செயலக உத்தியோகத்தர்களுடன் பேசும் மனோநிலை வடக்கில் கடமையாற்றிய எல்லா ஆளுநர்களாலும் முடிவதில்லை..
காரணம் உத்தியோகத்தர்கள்களை சந்திக்கக் கூடாது என்பதற்காக இல்லை பதவி போய் விட்டதே என்ற ஆதங்கம் தான்..
ஆனால் வடக்கின் முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராஜாவால் இது சாத்தியமானது... ஏனெனில் அவர் ஒரு மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ..பல சமூக நிறுவனங்களின் பணிப்பாளராக மக்களுடன் இணைந்து செயற்பட்டவர்..
தான் விடைபெறும் நேரத்தில் கூட உத்தியோகத்தர்களுடன் கலந்துரையாடும் மனோநிலை இயல்பாகவே கிடைத்தது"என தெரிவித்துள்ளார்

No comments