யாழில் அதிகரிக்கும் சிறுவர் தற்கொலைகள்!




யாழ்.குடா நாட்டில் தற்போது இளம் வயதினரின் தற்கொலைகள் அதிகரித்துள்ளதாக மருத்துவ வட்டாரங்கள் எச்சரித்துள்ளன.

இந்நிலையில் கடந்த 2022ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2023ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் 18 வயதிற்கு உட்பட்ட 11 பேர் தவறான முடிவினை எடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர்.

யாழ். மாவட்ட மருத்துவத்துறை புள்ளிவிபரங்களின் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் கடந்த 2022ஆம் ஆண்டு 175 பேர் தவறான முடிவெடுத்து தமது உயிர்களை மாய்த்துள்ளனர்.

அவர்களில் 09 பேர் 18 வயதிற்குள் உட்பட்ட சிறுவர்கள். இதேவேளை, 2023 ஆம் ஆண்டின் முதல்காலாண்டுவரையாக 18 வயதிற்குட்பட்ட 2 சிறுவர்களுமாக மொத்தமாக 11 சிறுவர்கள் உயிரை மாய்த்துள்ளனர்.

இந்த வருடம் ஏப்ரல் மாதம் முதல் வாரம் வரையிலான கால பகுதியில் 54 பேர் உயிர் மாய்த்துள்ளனர்.

அவர்களில் இருவர் 18 வயதிற்கு உட்பட்ட சிறுவர்கள் என தெரியவந்துள்ளது. 

அதேவேளை இந்த ஆண்டு ஏப்ரல் முதல் வாரம் வரையில் யாழ். மாவட்டத்தில் 50 பேர் உயிர் மாய்க்க முற்பட்ட நிலையில் , உறவினர்களால் காப்பாற்றப்பட்டு யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுள்ளனர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

தமது உயிரை மாய்க்க முற்படுவது தண்டனைக்கு உரிய குற்றம் என இலங்கை சட்டங்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.  



No comments