யாழில். தனியார் கல்வி நிலையங்களை சூழ பொலிஸ் ரோந்து நடவடிக்கை முன்னெடுக்க தீர்மானம்


யாழ்ப்பாண மாவட்டத்தில் சனி மற்றும்  ஞாயிறு ஆகிய தினங்களில் தனியார் வகுப்புகள் இடம் பெறும் இடங்களுக்கு அண்மையில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு கடமைகளை மேற்கொள்ளுமாறு ஒருங்கிணைப்பு குழுவின் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவால் விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்றைய தினம் யாழ் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு  கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதோடு குறித்த விடையத்தினை தொடர்ந்து செயற்படுத்துவதாக யாழ்  மாவட்ட பிரதி பொலிஸ்மா அதிபரால்   உறுதியளிக்கப்பட்டது.

கடந்த வாரம் முதல் தனியார் வகுப்பு நிலையங்களுக்கு அருகில் பொலிசாரின் ரோந்து நடவடிக்கை  அதிகரிக்கப்பட்டுள்ளதோடு பாதுகாப்பு நடவடிக்கையும்  முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவித்திருந்தார்

No comments