இலங்கை கடற்பரப்பில் 125 கிலோ ஹெரோயின் பறிமுதல்


இலங்கையின் தெற்குக் கடற்பகுதியில் 125 கிலோ கிராம் எடையுள்ள ஹெரோயின் போதைப்பொருளை கடத்திச் சென்ற இழுவைப் படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

புலனாய்வுப் பிரிவினரும், கடற்படையினரும் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் இந்த பாரியளவிலான போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

பெருமளவான போதைப்பொருளை ஏற்றிச் சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலுடன் 6 சந்தேகநபர்களும் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

போதைப்பொருள் கடத்திய படகு மற்றும் சந்தேக நபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு இன்றைய தினம் வியாழக்கிழமை கொண்டு வரப்படவுள்ளனர்

No comments