யாழ். போதனாவில் சிகிச்சை பெற்று வந்த விளக்கமறியல் கைதி உயிரிழப்பு


யாழ்ப்பாணம் சிறைச்சாலையில், தடுத்து வைக்கப்பட்டு இருந்த  விளக்கமறியல் கைதி இன்றைய தினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார்.

உடுவில் பகுதியைச் சேர்ந்த யோகராசா கஜன் (வயது 32) என்பவரே உயிரிழந்துள்ளார்.

சிறுநீரக செயலிழப்பு காரணமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சில வாரங்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் , சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். 

No comments