வட்டுக்கோட்டையில் வயலுக்குள் பாய்ந்த இ.போ.ச பேருந்து


யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டைபகுதியில் உள்ள  வயலுக்குள் பாய்ந்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்து ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பொதுமக்களால் மீட்கப்பட்டது.

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை, பயணித்த பேருந்து கட்டுப்பாட்டை இழந்து வயல்வெளிக்குள் பாய்ந்தது. 

அதிஷ்டவசமாக இ.போ.ச.பேருந்து பயணிகள் சேவையில் ஈடுபடாத நிலையில் பேருந்தில் ஒரு சில  இ.போ.ச ஊழியர்கள் மாத்திரம் பயணித்திருந்தனர்.

இந்நிலையில் விரைந்து செயற்பட்ட பொதுமக்கள் ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் பேருந்தை தூக்கி வீதிக்கு கொண்டு வந்தனர்.

No comments