ஒரு மில்லியன் முட்டைகளுடன் கொழும்பை வந்தடைந்த கப்பல்!


ஒரு மில்லியன் முட்டைகளை தாங்கிய கப்பல் ஒன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

அரச வணிக பலநோக்கு கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஆசிரி வலிசுந்தர இதனைத் தெரிவித்துள்ளார்.

அந்த கப்பலில் உள்ள முட்டைகள், அனுமதிக்காக கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

கடந்த 23 ஆம் திகதி இரண்டு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு கொண்டு வரப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதனையடுத்து ஒரு மில்லியன் முட்டைகள் இறக்குமதி செய்யப்பட்டன.

இதன்படி, இதுவரை நான்கு மில்லியன் முட்டைகள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளன.

No comments