மூத்த ஊடகவியலாளர் மாணிக்கவாசகம் காலமானர்!


வவுனியாவை சேர்ந்த மூத்த ஊடகவியலாளரான பி. மாணிக்கவாசகம் இன்றைய தினம் புதன்கிழமை காலமானார்.

BBC , வீரகேசரி உள்ளிட்ட ஊடகங்களில் பணியாற்றி வந்தவராவர்.

பல நெருக்கடியான சந்தர்ப்பங்களில் துணிச்சலுடன் செய்தி அறிக்கையிட்டவர். இவரது ஊடக சேவையை கௌரவிக்கும் முகமாக கடந்த 2019ஆம் ஆண்டு யாழ். ஊடக அமையம் விருது வழங்கி கௌரவித்து இருந்தது. 

தனது நீண்டகால ஊடக பணியில் பல பாராட்டுக்களையும், விருதுகளையும், கௌரவிப்புக்களையும் பெற்றுக்கொண்ட பி. மாணிக்கவாசகம் வவுனியாவின் அடையாளமாக திகழ்ந்தார் என்றாலும் மிகையாகாது.

No comments