துயிலுமில்லங்களை அலற வைக்கும் முன்னணி!

 


மக்கள் மயப்படுத்தப்படவேண்டிய எழுச்சி நினைவேந்தல்களை தனியார் நிறுவன நிகழ்வுகளாக்க முன்னணி என்றுமே பின்னிற்பதில்லை.தற்போது அன்னை பூபதியம்மா நினைவூர்தி வெறும் சாரதியுடன் இலங்கை படைகளது ஆக்கிரமிப்பிலுள்ள கொடிகாமம் துயிலும் இல்லத்தின் முன் தரித்துநின்று, சுடரேற்றி அஞ்சலிப்பதாக நடந்த முன்னணியின் புகைப்படங்களை காட்சிக்கு விடுத்துள்ளனர் ஆதரவாளர்கள்.

வழமையாக சிறு அணி சகிதம் ஆர்ப்பாட்டங்களை செய்து இலங்கை இன அழிப்பு அரசை அலற வைக்கும் முன்னணி தற்போது சாரதியுடன் துயிலுமில்லங்கள் முன்னதாக சென்று அலற வைக்க தொடங்கியுள்ளதாக ஆதரவாளர் சொல்கின்றனர்.

ஆனாலும் இதனால் இலங்கை படைகள் முகாம்களில் வேடிக்கை பார்க்க படையினர் குவிவது வழமையாகியுள்ளது.

அன்னை பூபதி இந்திய அரசிற்கு எதிராக கோரிக்கைகளை முன்வைத்து போராடிய நிலையில் நல்லூரிலுள்ள இந்திய தூதரகம் பக்கமே எட்டிப்பார்த்திருக்கவில்லையென மநுபுறம் விமர்சனங்கள் எழுவதை கண்டுகொள்வதாக இல்லை முன்னணி தலைவர்கள்.


No comments