தளபதி வருகிறார்:பறப்பும் அதிகம்!



 யாழ்ப்பாணம் - சென்னைக்கு இடையிலான விமான சேவை எதிர்வரும் மே மாதம் 19 ஆம் திகதி அதிகரிக்கவுள்ளது.அத்துடன் பயண நாட்கள் மற்றும் நேரமும் மாற்றப்படவுள்ளது. இதன்படி திங்கள்,புதன்,வெள்ளி ஞாயிறு ஆகிய நாட்களில் நடைபெறுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

பயணிகளது எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியதையடுத்தே விமான சேவை எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே இலங்கை விமானப்படைத் தளபதியின் அழைப்பின் பேரில் இந்திய விமானப்படைத் தளபதி விவேக் ராம் சௌத்ரி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு மே முதலாம் திகதி இலங்கைக்கு வருகைதரவுள்ளார்.

இலங்கையில் அவர் தங்கியிருக்கும் காலத்தில், ஜனாதிபதி, பிரதமர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஆகியோரை சந்திப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பிராந்திய விமானப்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துதல், கூட்டுப் பயிற்சி மற்றும் தொழிநுட்ப அறிவு பரிமாற்றம் பற்றிய விவாதங்களை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.


No comments