இலங்கையில் சட்டம் தமிழ் சிங்கள அமைச்சர்களிற்கு தனித்தனி!



வெடுக்குநாறி மலை ஆதிலிங்கேசுவரர் ஆலயம் தொடர்பில் நீதிமன்ற வழக்கு  நிலுவையில் இருப்பதால் உடைத்தெறியப்பட்ட சிலைகளை மீள வைக்கமுடியாது. ஜனாதிபதியுடன் "ஆற அமர" பேசிய பின்பே இந்த விடயத்தில் முடிவெடுக்கப்படும். ஆலயப் பகுதிக்கு சுற்றுலா மேற்கொண்ட அரச அமைச்சர் அணி கைவிரித்தமை வாதப்பிரதிவாதங்களை தோற்றுவித்துள்ளது.

இதே நீதிமன்ற தடை உத்தரவு வலுவில் இருந்த பொழுதே குருந்தூர் மலையில் விகாரை அமைப்பதற்கான அடிக்கல்லை அரச அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க நாட்டி வைக்க இராணுவத்தின் பங்களிப்புடன் விகாரை கட்டி முடிக்கப்பட்டது. 

ஆட்சியாளர்களிடம் மட்டுமல்ல சட்டத்திற்கு முன்னும் தமிழர்கள் இரண்டாம் பட்சம் தான் என குரல்கள் ஓங்கி ஒலித்த வண்ணமுள்ளன.

இலங்கையின் தமிழ் மற்றும் சிங்கள அமைச்சர்களிற்கு சட்டம் தனித்தனியாக அமுலில் உள்ளதாவென்ற கேள்வி தலையிடியை அரச விசுவாச தமிழ் அமைச்சர்களிற்கு தோற்றுவித்துள்ளது.


No comments