நெல்லியடி பொலிஸ் அதிரடி படை வீரர் , கொழும்பில் ஹெரோயினுடன் கைது


யாழ்ப்பாணம் நெல்லியடி பொலிஸ் விசேட அதிரடி படை முகாமில் கடமையாற்றும் விசேட அதிரடி படை வீரர் கொழும்பு மாளிகாவத்தை பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார். 

மாளிகாவத்தை பொலிஸார் நேற்றைய தினம் திங்கட்கிழமை மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது நபர் ஒருவர் ஹெரோயின் போதைப்பொருளை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார். 

கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த வேளை , குறித்த நபர் பொலிஸ் விசேட அதிரடி படையை சேர்ந்தவர் எனவும் , தற்போது நெல்லியடி முகாமில் கடமையாற்றுபவர் எனவும்,  விடுமுறையில் கொழும்பு வந்த வேளையே , போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments