யாழில்.பாடசாலை மாணவர்களுக்கு மாவா பாக்கு விற்ற குற்றச்சாட்டில் இளைஞன் கைது


யாழ்ப்பாணத்தில் மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா பாக்குகளை விற்பனை செய்து வந்த குற்றச்சாட்டில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை மாலை  இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். .

கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 100 ரூபாய் பெறுமதியான 250 மாவா போதை பாக்கு பொட்டலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கோப்பாய் பொலிஸார் தெரிவித்தனர். 

ஊரெழு பகுதியை சேர்ந்த 23 வயதுடைய இளைஞனையே கைது செய்துள்ளதாகவும் , குறித்த நபர் ஊரெழு , உரும்பிராய் உள்ளிட்ட யாழின் பல பாகங்களில் உள்ள பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை கலந்த மாவா பாக்குகளை விற்பனை செய்து வந்த நிலையில் தமக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் கைது செய்துள்ளதாகவும், கைது செய்யப்பட்ட நபரிடம் விசரணைகளை முன்னெடுத்து உள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

No comments