பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல


பொது நிறுவனங்களை மறுசீரமைப்பது என்பது அவற்றை விற்பனை செய்வதல்ல என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

கேகாலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மறுசீரமைப்பு மூலம் ஏகபோகத்தை குறைத்து மக்களுக்கு சேவைகளை வினைத்திறனுடன் வழங்க முடியும் எனவும்  சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments