தேர்தலில் போட்டியிடும் ஊழியர்களுக்கு ஏப்ரல் 10ம் திகதிக்குள் அடிப்படை சம்பளம் !


உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கான அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

புத்தாண்டு பிறக்கவுள்ள நிலையில் அரச உத்தியோகஸ்தர்கள் பாரிய அசௌகரியங்களை எதிர்நோக்குவதாக கூறி, உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடும் அரச ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்படுமா என ஜகத் குமார கேள்வி எழுப்பினார்.

இதற்கு நாடாளுமன்றில் இன்று செவ்வாய்க்கிழமை பதிலளித்து உரையாற்றிய அவர், ஊழியர்களுக்கான மார்ச் 9 மற்றும் ஏப்ரல் 25 ஆம் திகதிகளுக்கான சம்பளம் வழங்கப்படும்.

அடிப்படை சம்பளம் 10 ஆம் திகதிக்குள் வழங்கப்படும் என இராஜாங்க அமைச்சர் ஜனக வக்கும்புர தெரிவித்துள்ளார்.

No comments