இந்திய இழுவை படகுகள் பிடிபட்டது!



இலங்கை கடற்பரப்பில் இரண்டு இந்திய இழுவை படகுகளை இலங்கை கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை கடற்பரப்பில் இருந்து இந்திய வேட்டையாடும் இழுவை படகுகளை விரட்டுவதற்கான விசேட நடவடிக்கையை இலங்கை கடற்படையினர் இன்று காலை (12 மார்ச் 2023) மேற்கொண்டனர். வெற்றிலைக்கேணிக்கு வடகிழக்கே இலங்கை கடற்பரப்பில் அனலைத்தீவுக்கு அப்பால் வேட்டையாடிய 16 இந்திய பிரஜைகளுடன் 02 இந்திய இழுவை படகுகள் கைப்பற்றப்படுவதற்கு இந்த நடவடிக்கை வழிவகுத்ததென கடற்படை அறிவித்துள்ளது.

16 இந்திய மீனவர்களுடன் கைப்பற்றப்பட்ட இழுவை படகுகள் காங்கேசன்துறை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டதுடன், அவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மயிலிட்டி கடற்றொழில் பரிசோதகரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டில், கடற்படையினர் 36 இந்திய வேட்டையாடும் இழுவை படகுகளை தீவு கடற்பகுதியில் கைப்பற்றி சட்ட நடவடிக்கைக்காக அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். இதற்கிடையில், 2023 இல் கடற்படை இந்த 02 இந்திய வேட்டையாடும் இழுவை படகுகளை கைப்பற்றியதுடன், அவையும் சட்ட நடவடிக்கைகளுக்காக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது


No comments