யாழ். பண்ணை கடலில் இருந்து பெண்ணின் சடலம் மீட்பு!
யாழ்ப்பாணம் பண்ணை கடல் பகுதியில் இருந்து , இன்றைய தினம் வியாழக்கிழமை மாலை பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மீன்பிடிக்க சென்ற கடற்தொழிலாளர் ஒருவர் கடலில் பெண்ணொருவரின் சடலம் மிதப்பதைக் கண்ணுற்று , யாழ்ப்பாண பொலிஸாருக்கு தகவல் வழங்கி இருந்தார்.
நீதிமன்ற உத்தரவினை பெற்று சடலத்தை மீட்க பொலிஸார் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.
Post a Comment