வருகின்றது ஜனாதிபதி தேர்தலே!



இலங்கையின் அடுத்து ஜனாதிபதி தேர்தல்  நடைபெறுமென்ற அமெரிக்க விக்டோரியா நூலண்ட் தெரிவித்த கருத்து தெற்கில் பேசுபொருள் ஆகியுள்ளது.தென்னிலங்கை ஆட்சி மாற்றத்தில் அமெரிக்க பங்கு பற்றிய சர்ச்சைகளிடையே தற்போதைய கருத்து சீற்றத்தை ராஜபக்ச தரப்பிடையே உருவாக்கியுள்ளது.

இதனிடையே  இலங்கையில் மார்ச் மாதத்தில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது இலங்கைக்கு மிகவும் முக்கியமானது என அரசியல் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உப இராஜாங்க செயலாளர் விக்டோரியா நுலண்ட் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதன்போது, இலங்கையின் ஜனநாயகம் மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்த வேண்டியதும் அவசியம் எனவும் அவர்  குறிப்பிட்டுள்ளார்.


அத்துடன், பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தம் கொண்டு வருவதும், அந்த திருத்தங்களை சர்வதேச சரத்துகளுக்கு அமைவாக வடிவமைப்பதும் அவசியம் எனவும் விக்டோரியா நுலண்ட்  தெரிவித்துள்ளார்

No comments