இராஜாங்க அமைச்சர்களுக்காக 39 சொகுசு வாகனங்கள் இறக்குமதி?


இராஜாங்க அமைச்சர்களுக்காக 39 சொகுசு வாகனங்கள் இறக்குமதி செய்யப்படுவதாக வெளியான செய்திகள் முற்றிலும் பொய்யானவை என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை உரையாற்றிய போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இந்த பொய்யான தகவல் பரப்பப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்

No comments