எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ரொக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது!


3 செயற்கைக்கோள்களை இணைத்து எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ரொக்கெட்டை, விண்ணில் வெற்றிகரமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிலையமான இஸ்ரோ செலுத்தியுள்ளது.

ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, இன்றைய தினம் வெள்ளிக்கிழமை) காலை 9.18 மணிக்கு எஸ்.எஸ்.எல்.வி- டி2 ரக ரொக்கெட் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டது.

இதில் பூமி கண்காணிப்பு செயற்கைக் கோளான இ.ஓ.எஸ்.07 மற்றும் கடந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.வி. ரக ரொக்கெட்டில் செலுத்தப்பட்டு தோல்வி அடைந்த செயற்கைக்கோள்களுக்கு பதிலாக தற்போது தயாரிக்கப்பட்ட ஆசாதி சாட்-2 மற்றும் ஜானஸ்-1 உள்பட 334 கிலோ எடை கொண்ட 3 செயற்கைக்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளது.

இதுபூமியில் இருந்து 356.2 கிலோமீட்டர் உயரத்தில் 450 கிலோமீட்டர் புவிவட்ட சுற்றுப்பாதையில் நிலைநிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் சிறிய செயற்கைக் கோள்களை சுமந்துசெல்லும் எஸ்.எஸ்.எல்.வி- டி1 ரக ரொக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, திட்டமிட்ட இலக்கில் செயற்கைக் கோள்களை நிலைநிறுத்த முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

No comments