மனித பாவனைக்கு தகுதியற்ற தேங்காய் எண்ணெய் இறக்குமதி?


வெளிநாடுகளால் நிராகரிக்கப்பட்ட மனித பாவனைக்கு தகுதியற்ற கழிவுகளுடன் கூடிய அதிகளவிலான தேங்காய் எண்ணெய் இலங்கைக்கு இறக்குமதி செய்யப்பட்டு களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாக தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் குறித்த சங்கத்தின் தலைவர் புத்திக டி சில்வா தெரிவிக்கையில், கடத்தல்காரர்களிடம் இருந்து பணத்தை பெற்றுக்கொண்ட அதிகாரிகள் இதை கருத்திற்கொள்ளாது செயற்படுவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் இறக்குமதி செய்யப்பட்ட தேங்காய் எண்ணெய் இந்தியா மற்றும் பிற அண்டை நாடுகளில் இருந்து மிகக் குறைந்த விலையில் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments