மினுவாங்கொடையில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் உயிரிழப்பு!


மினுவாங்கொட – பொரகொடவத்த பிரதேசத்தில் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்றைய தினம் வியாழக்கிழமை இரவு 9.45 அளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் 30 வயதுடைய பீலவத்தை அடியம்பலம் பகுதியைச் சேர்ந்தவர் எனவும், குறித்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போது, வீதியில் மறைந்திருந்தவர்களே துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது. 

No comments