நடக்குமா?நடக்காதா?



 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்கு தேசிய தேர்தல் ஆணைக்குழு உறுப்பினர்கள் உரிய வர்த்தமானி அறிவித்தலில் கையொப்பமிட வேண்டிய அவசியமில்லை என்று  தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா, திங்கட்கிழமை (30) தெரிவித்தார்.


 இது தொடர்பான வர்த்தமானி திங்கட்கிழமை (30) அல்லது செவ்வாய்க்கிழமை (31) அச்சிடுவதற்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் மாவட்ட தெரிவத்தாட்சி அதிகாரிகளிடம் இருந்து தேவையான ஆவணங்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


உள்ளூராட்சி மன்றத் தேர்தல் நடவடிக்கைகளை ஆரம்பிப்பதற்குத் தேவையான தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மற்றும் ஏனைய உறுப்பினர்களின் கையொப்பங்களுடன் கூடிய வர்த்தமானி அறிவித்தல் அச்சிடுவதற்கு இதுவரை அரசாங்க அச்சகத்துக்கு அனுப்பப்படவில்லை என்று அரசாங்க தகவல் திணைக்களம் ஞாயிற்றுக்கிழமை (29) தெரிவித்திருந்தது.


அரசாங்க தகவல் திணைக்களத்தின் அரச செய்தி பணிப்பாளர் நாயகம் சிந்தன கருணாரத்னவின் கையொப்பத்தில் இந்த விசேட அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த நிலையிலேயே தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மேற்குறிப்பிட்ட விடயத்தை அறிவித்துள்ளார்

No comments