யாழ். மாநகர முதல்வர் தெரிவில் தன் தலையீடு இல்லையாம்!


யாழ். மாநகர சபையில் இடம்பெற்ற புதிய முதல்வர் தெரிவு தனது அதிகாரத்திற்கு உட்பட்ட விடயம் அல்ல என வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா தெரிவித்துள்ளார்.

ஆளுனரின் அழுத்தத்தினாலேயே யாழ் மாநகர முதல்வராக இம்மானுவேல் ஆர்னோல்ட் நியமிக்கப்பட்டதாக செய்திகள் வெளியாகியிருந்தமை தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரையும் ஆணையாளரை நியமிக்கும் அதிகாரங்கள் மட்டுமே ஆளுநரிடம் தங்கியுள்ளது.

அரசியல் அமைப்பின் பிரகாரம் முதல்வர் தெரிவை மேற்கொள்ளும் அதிகாரம் உள்ளூராட்சி ஆணையாளருக்கே இருக்கின்றது என தெரிவித்தார்.

No comments