தமிழகத்திற்கு சென்ற ஐவர்!


இலங்கையில் இருந்து கடல்வழியாக இன்றைய தினம் திங்கட்கிழமை ஐந்து பேர் தமிழகம்  ராமேஸ்வரம் அடுத்த சேராங்கோட்டை பகுதியை சென்றடைந்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டம் பாரதிபுரத்தை சேர்ந்த பாரதி டிஸ், அவரது தாய் முனியம்மா, அவரது இரண்டு மகன்கள் ஒரு மகள் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் கிளிநொச்சி மாவட்டம் நாச்சிக்குடா கடற்கரையில் இருந்து நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மீன்பிடி படகில் புறப்பட்டு இன்று (திங்கட்கிழமை ) அதிகாலை ராமேஸ்வரம் அடுத்துள்ள சேராங்கோட்டை கடற்கரையை சென்றடைந்துள்ளனர்.

தகவலறிந்த ராமேஸ்வரம் மரைன் பொலிஸ் இலங்கை தமிழர்களை மீட்டு மண்டபம் மரைன் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments