ரணில் பாணி:தாக்குதல் தொடக்கம்!

 




மேலுமொரு அரசியல் கைதி 12வருடங்களின் பின்னராக விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர்  அமைப்பின் முக்கிய செயற்பாட்டாளர் ஒருவருக்கு கொலை அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதோடு, வீட்டின் மீது தாக்குதலும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடக்கு கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தின் வவுனியா மாவட்ட செயலாளர் சிவானந்தன் ஜெனிதாவின் வீட்டின் மீதே இன்று அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

முன்னரும் தொடர்ச்சியாக தொலைபேசி மூலமாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல் நிலையத்திலும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் அவரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 

கடந்;த 15 ஆம் திகதி தைப்பொங்கல் தினத்தன்று; ரணில் விக்ரமசிங்கவின் யாழ் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, நல்லூரில் போராட்டம் இடம்பெற்றிருந்தது. அதனையடுத்து போராட்டத்தில் கலந்துகொண்ட தவத்திரு வேலன் சுவாமிகள் அண்மையில் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.

அதேவேளை போராட்டத்தில் கலந்துகொண்ட மாணவ தலைவர்களையும் கைது செய்ய காவல்துறையினர் முற்பட்டிருந்தனர். 

தவத்திரு வேலன் சுவாமிகளது கைது பலத்த கண்டனத்தை தோற்றுவித்திருந்த நிலையில் தற்போது தாக்குதல்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது.


No comments