வடமராட்சி கிழக்கு கடலில் ஏதிலிகள் படகு!



மாலைதீவிலிருந்து தப்பிக்க முற்பட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் ஏதிலிகளது படகொன்று வடமராட்சி கிழக்கில் கரை ஒதுங்கியுள்ளது.

 வடமராட்சிக் கிழக்கு  கடலில் கப்பல் ஒன்று பழுதடைந்த நிலையில் அதில் நூற்றுக்கு மேற்பட்டவர்களுடன் தத்தளித்துக் கொண்டிருப்பதாகவும், அதனை மீட்பதற்கான நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருப்பதாகவும்,  தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிற நாட்டைச் சேர்ந்தவர்களே இந்த கப்பலில் தத்தளித்து கொண்டிருப்பதாகவும், இதனை அவதானித்த வடமராட்சிகளுக்கு கட்டக்காட்டு மீனவர்கள் கடற்படைக்கு அறிவித்துள்ளதாகவும், கடற்படையும் மக்களும் இணைந்து மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள இருப்பதாகவும் சற்று முன்னர் தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.

No comments