மீண்டும் திருட்டில் இலங்கை இராணுவம்!



யாழ்ப்பாணம் – பருத்தித்துறை வீதியில் வல்லை பகுதியில் அமைக்கப்பட்டிருந்த சோலார் சக்தியில் இயங்கும் வீதி மின் விளக்குகள் கொள்ளையர்களால் கம்பத்தோடு அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

திருட்டு தொடர்பில் அப்பகுதியிலுள்ள இலங்கை இராணுவ படைமுகாம் மீது சந்தேகம் எழுந்துள்ளது

தலா 1 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான 5  வீதி மின்விளக்குகள் அவை பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பத்துடன் சேர்த்து எடுத்துச் செல்லப்பட்டிருக்கின்றது.

கரவெட்டி பிரதேசசபையினால் அமைக்கப்பட்ட மேற்படி வீதி விளக்குகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டிருக்கின்றது.

மேலும் கொள்ளையடிக்கப்பட்ட வீதி விளக்குகளை சாதாரகமாக எடுத்துச் செல்ல முடியாது. என்பதுடன் வீதி விளக்குகள் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பத்தை அடியில் அறுத்து எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. 


No comments