வவுனியாவில் துப்பாக்கியுடன் இளைஞனின் சடலம் மீட்பு!


வவுனியாவில் சட்டவிரோத மின் வேலியில் சிக்குண்டு இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், சடலத்திற்கு அருகில் இருந்து நாட்டு துப்பாக்கி ஒன்றும் மீட்கப்பட்டுள்ளதாக மடுக்கந்தை பொலிஸார் தெரிவித்தனர்.

குடாகச்சிகொடிய மேதாமாவத்தையைச் சேர்ந்த உமேஸ் லக்சன் (வயது 25) என்ற இளைஞரே இவ்வாறு  உயிரிழந்துள்ளார்.

வவுனியா, குடகச்சிக்கொடி பகுதியில் நேற்றைய தினம் புதன்கிழமை இரவு இடம்பெற்ற இச் சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

குடாகச்சிக்கொடிய மானேரிகுளம் பகுதியில் விலங்குகளை வேட்டையாடுவதற்காக சென்ற குறித்த இளைஞர் அங்கு சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட மின்வேலியினை சிக்குண்டு உயிரிழந்து இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. 

இளைஞரின் சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக வவுனியா பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மடுக்கந்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

No comments