காணி சுவீகரிப்புக்கு எதிராக வடமாகாண ஆளுநர் அலுவலகத்திற்குமுன் போராட்டம்!!

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி எற்பாட்டில், முப்படைகளின் தேவைக்கு மக்களது காணிகளை சுவீகரித்துக்கொள்வதற்கான எதிர்ப்பு கண்ட

கவனயீர்ப்பு போராட்டம் இன்று யாழ். மாவட்டத்தில் அமைந்துள்ள  வடமாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்பாக இடம்பெற்றது.

இதில், எமது நிலம் எமக்கு வேண்டும், தமிழ் அதிகாரிகளே ஆளுநரது பதவிக்கு துணைபோகாதீர்கள், தமிழர்களின் நிலங்களே அபகரிக்காதே, ஐ.எம்.எப் பெறுவதற்கு நாடகமே, இனப்படுகொலை இராணுவமே தமிழர்களது நிலங்களை அபகரிக்காதே, ரணில் - ராஜபக்ச அரசே கட்டமைக்கப்பட்ட இன அழிப்பை நிறுத்து, வடக்கும் கிழக்கும் தமிழர் தாயகம் என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை எந்திய வண்ணம், கோஷமிட்டவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பிரதேச செயலாளர்களுக்கும் ஆளுநருக்கும் இடையில், தமிழரின் காணிகள் சுவீகரிப்பு தொடர்பிலான கூட்டம் இன்று மதியம் ஆளுநர் செயலகத்தில் இடம்பெறயிருக்கும் நிலையில் அதனை தடுக்கும் வகையில் இப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதில் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி  ஊடகப்பேச்சாளர் சட்டத்தரணி க.சுபாஸ் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

செய்தி:பு.கஜிந்தன்


No comments