காங்கேசன்துறை: ஆராய்கிறார் அமைச்சர்!



இலங்கை துறைமுகங்கள் மற்றும் விமான சேவைகள் ராஜாங்க அமைச்சர் காங்கேசன்க துறைமுகத்திற்கு விஜயம் மேற்கொண்டு காங்கேசன் துறைமுகத்தின் தற்போதைய நிலைமைகள் தொடர்பில் ஆராய்ந்து வருகின்றார்.

காங்கேசன்துறை துறைமுகம் வர்த்தக துறைமுகமாக தரம் உயர்த்தப்படவுள்ளதாக   துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்த அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த அமைச்சு அறிவித்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேறபடி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த அமைச்சின் ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

பிராந்திய கடல் வலயத்தில், இலங்கையை ஒரு பிரதான மையமாக மாற்றுவதையும், இந்தியா மற்றும் இலஙகைக்குமிடையே யுள்ள சுற்றுலாவை மேம்படுத்துவதையும் மையமாகக்கொண்ட,  இலங்கையில் உள்ள துறைமுகங்களில் மிக முக்கியமான துறைமுகமான காங்கேசன்துறை துறைமுகத்தை வர்த்தக துறைமுகமாக மேம்படுத்தவும் வேலைத்திட்டங்கள் ஆரம்பித்துள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை இடையே. இந்த திட்டம் EXIM வங்கியின் 45.27 மில்லியன் அமெரிக்க டாலர் நிதியின் கீழ் செயல்படுத்தப்படுகிறது, மேலும் இந்த திட்டேத்தினை செயல்படுத்தும் முகவர் இலங்கை துறைமுக அதிகாரசபை ஆகும்.

No comments