விபத்து எதிரொலி:கட்டுப்பாடுகள் வருகின்றன!



யாழ் கொழம்பு சேவையில் ஈடுபடும் அனைத்து பேருந்துகளும் நாளை மறுதினம் முதல் முகமாலையில் பரிசோதனைக்குட்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து பேருந்துகளின் வழித்தட அனுமதி,சாரதி அனிமதிபத்திரங்களும் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை  முதல் முகமாலையில் பரிசோதிக்கப்பட உள்ளதாக  வடக்கு மாகாண வீதி பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் உறுப்பினரும் வடக்கு மாகாண தனியார் போக்குவரத்து உரிமையாளர் சங்கத்தின் தலைவருமான சி,சிவபரன் தெரிவித்துள்ளார்.

அனுமதிபத்திரங்கள்  முகமாலையில் பரிசோதிக்கப்படுவதுடன் புளியங்குளப் பகுதியில் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு செல்லும் அனைத்து பேருந்துகளும் 20 நிமிடங்கள் நிறுத்தி மீண்டும் பயணிக்க அனுமதிக்கப்படுமெனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்பிற்கு பயணித்த பேருந்து வவுனியாவில் வேக  கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகி மூவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது,


No comments