ராஜபக்சக்களது அம்பாந்தோட்டையிலேயே பட்டினி அதிகம்!



ராஜபக்சக்களது கோட்டையான அம்பாந்தோட்டை சூரியவெவ பிரதேசத்தில் மந்தபோசனை 80 வீதமாக அதிகரித்துள்ளதாக மருத்துவ மற்றும் சிவில் உரிமைகளுக்கான மருத்துவர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

இந்த புள்ளிவிபரங்கள் பொய்யானவை என யாராவது கூறினால் அவர்களுடன் விவாதத்திற்கு தயார் என அதன் தலைவர் கலாநிதி சமல் சஞ்சீவ சுட்டிக்காட்டியுள்ளார்.

ஹம்பாந்தோட்டை மாத்திரமன்றி கொழும்பு பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களும் தற்போது போசாக்கு குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். 

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க மருத்துவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், நாட்டு மக்கள் உண்மையை அறிந்து கொள்ளவதில் அரசாங்கம் பயப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments