கனடா கத்திக்குத்து! இரண்டாவது கொலையாளியும் இறந்தார்!


கனடாவில் 10 பேரைக் கத்தியால் குத்தி 19 பேர் காயமடையச் செய்த சம்பவத்தில் சந்தேக நபரான மைல்ஸ் சாண்டர்சன் (வயது 32) காவல்துறையினரால் பிடிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சஸ்காட்செவன் மாகாணத்தில் ஒரு நெடுஞ்சாலையில் வாகனம் ஒன்றில் சாண்டர்சன் 150km/h (93mph) வேகத்தில் தப்பிச் சென்றதால் காவல்துறையினர் துரத்திச் சென்ற கைது செய்யப்பட்ட பின்னர் காயமடைந்த அவர் பின்னர் இறந்தார் என்று காவல்துறையினர் கூறுகின்றனர்.

அவர்கள் எந்த விவரமும் தெரிவிக்கவில்லை. சாண்டர்சன் தான் ஏற்படுத்திய காயங்களால் இறந்தார் என்று பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் கூறினார்.

வானத்தில் ஒரு கத்தியையும் காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

கடந்த திங்கட்கிழமை மற்றொரு சந்தேக நபரான டேமியனின் உடலைக் கண்டெடுத்த காவல்துறையினர், அவரது சகோதரர் அவரைக் கொன்றாரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

No comments