ஏழை நாடுகளுக்கு அனுப்பும் உக்ரேனிய தானியங்கள் ஐரோப்பிய நாடுகளைச் சென்கின்றன: புடின்


ரஷ்யா - உக்ரைன் இடையே ஐ.நா ஒப்பந்தத்தின் கீழ் உலகளாவிய உணவு நெருக்கடியைத் தணிக்க கருங்கடல் வழியாக அனுப்படும் ஏழை மற்றும் வளரும் நாடுளுக்கு அனுப்பப்படும் கோதுமை மற்றும் தானியங்களை பணக்கார ஐரோப்பிய நாடுகளுக்குச் சென்றடைவதாக ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் கூறியுள்ளார்.

உக்ரைனில் இருந்து ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து தானியங்களும் ஏழ்மையான வளரும் நாடுகளுக்கு அனுப்பப்படவில்லை. 

உக்ரேனிய தானிய ஏற்றுமதி வளரும் நாடுகளின் இழப்பில் பணக்கார ஐரோப்பிய நாடுகளுக்கு உதவுகிறது என்று புடின் புதன்கிழமை என்று அவர் ரஷ்யாவின் பசிபிக் துறைமுகமான விளாடிவோஸ்டாக்கில் ஒரு பொருளாதார மன்றத்தில் கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் காலனித்துவவாதிகளா செயல்படுவதாக குற்றம் சாட்டிய படினி, இவர்கள் மீண்டும் வளரும் நாடுகளை ஏமாற்றிவிட்டார்கள்" என்றார்.

இந்த வழியில் தானியங்கள் மற்றும் பிற பொருட்களின் ஏற்றுமதியை கட்டுப்படுத்துவது பற்றி நாம் சிந்திக்க வேண்டுமா? அவர் கேள்வி எழுப்பினார்.

தானியம் மற்றும் நமது உணவு ஏற்றுமதி தொடர்பான இந்த முழு விவகாரமும் முதன்மையாக வளரும் சந்தைகளுக்கு அனுப்பப்பட வேண்டும் என்று நாங்கள் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்று அவர் கூறினார்.

ஆனால் ஜூலை ஒப்பந்தத்தை கண்காணிக்கும் இஸ்தான்புல்லில் உள்ள ஒரு கூட்டு மையத்தால் தொகுக்கப்பட்ட தரவு, ஐரோப்பிய நாடுகளுக்கு வழங்கப்பட்ட தானியத்தில் மூன்றில் ஒரு பங்கை விட சற்று அதிகமாகவும் மேலும் 20 சதவிகிதம் துருக்கிக்கு வந்ததாகவும் காட்டியது. ஸ்பெயின் மற்றும் எகிப்து ஆகியவை தானியத்தின் பெரிய பெறுநர்களாக உள்ளன, தரவு காட்டுகிறது.

ஆனால் உக்ரைனின் வெளியுறவு மந்திரி டிமிட்ரோ குலேபா ஒரு அறிக்கையில் புடின் கூறியதை மறுத்தார்.

மொத்தத்தில், அனுப்பப்பட்ட கப்பல்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு அனுப்பப்படுகின்றன என்று குலேபா கூறினார்.

No comments