வெளியேறினாலும் இலங்கைக்கு உதவி:நோர்வே



கொழும்பில் உள்ள தூதரகத்தை அடுத்த ஆண்டு மூடினாலும் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான உதவிகள் தொடரும் என இலங்கைக்கான நோர்வே தூதுவர் ட்ரைன் ஜோரன்லி எஸ்கெலாட் தெரிவித்துள்ளார்.

பிரதமர் தினேஷ் குணவர்தனவுடன் பிரதமர் அலுவலகத்தில்  இடம்பெற்ற சந்திப்பின் போதே தூதுவர் இந்த உறுதிமொழியை வழங்கினார்.

1960களில் மீன்பிடித் துறையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒத்துழைப்பின் ஊடாக ஆரம்பிக்கப்பட்ட 60 வருடங்களுக்கும் மேலாக இலங்கைக்கு நோர்வே வழங்கிய ஆதரவிற்கு பிரதமர் நன்றி தெரிவித்தார்.


No comments